பூச்சரம் : இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS அறிவித்தல்கள் >> >>Directory For English Bloggers Launched >> www.orchidslk.co.nr >>

Ceylinco

இலங்கையர் ஒவ்வொருவருக்கும் தெரிந்த corporate பெயர் Ceylinco. ஏன் அதன் தலைவர் தேசமான்ய லலித் கொதலாவலவை தெரியாதோரும் இல்லை என்று சொல்லலாம்.. இவர் ஒரு Business Tycoon ஆக மட்டுமல்லாது சிறந்த பரோபகாரியாகவும் நாடு பூராவும் தெரிந்தவர். இவரது நிறுவனங்கள் கால் பதிக்காத துறையே இல்லையென்று சொல்லலாம்.. இவரது நிறுவனங்கள் பற்றி தெரிய வேண்டுமானால் ceylinco என்று Google இல் தேடிப்பாருங்கள். அது எந்த துறை சார்ந்த நிறுவனம் என்றாலும் நிறுவனத்தின் பெயரில் Ceylinco வருமாறு பார்த்து கொள்வார்.. அவருக்கு தெரியும் மக்கள் அந்த பெயர் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று.

ஆனால் இது எல்லாம் பழைய கதையாகிப்போனது தான் சோகம். ஏன் என்பதுதான் இந்த பதிவு..

ஒரு நாள் Ceylinco குழும நிறுவனம் Golden Key திவால் ஆகி போனதாக திடீரென செய்திகள் பரவ ஆரம்பித்தன. இந் நிறுவனத்தில் முதலிட்ட பலருக்கு அதற்கான வட்டி சில மாதங்களாக செலுத்தபடாததால் சந்தேகம் கொண்ட சில முதலீட்டாளர்கள் வைப்புகளை திருப்பி பெற முயற்சிக்க; வைப்புகளை திருப்பி எடுக்க முடியாதென்று நிறுவனம் சொல்ல அப்போதுதான் பலருக்கு நெருப்பு பற்றி கொண்டது.. அண்மைக் காலமாக சக்விதி பிரமுக என பல முதலீடுகளில் பணத்தை இழந்த இலங்கை முதலீட்டாளர்கள் ரொம்பதான் பயந்து போனார்கள். Golden Key இற்கு முன்னால் எல்லோரும் வரிசை கட்டி நிற்க பிரச்சினை இன்னும் சிக்கலாகியது.. செய்தியும் காட்டுத்தீ போல் பரவியது. இன்னும் சில வைப்பாளர்கள் Ceylinco குழும நிறுவனமான Seylan Bank இல் வைப்பிட்ட பணத்தயும் மீளப்பெற முயற்சிக்க மத்தியவங்கி உடனடியாக தலையிட்டு Seylan Bank இன் நிருவாகத்தை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. இது வெறுமனே மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயல் மட்டுமே. ஏன் என்றால் இந்த நிலையிலும் Seylan Bank இன் தலைவராக லலித் கொதலாவல தொட்ர்ந்து இருக்க மத்திய வங்கி அனுமதித்தது.

இந்த இடத்தில் ஒரு அடிப்படை விஷயத்தை விளக்க வேண்டும். மக்கள் வங்கியில் போடும் பணம் எல்லாம் வங்கியின் Locker இல் பாதுகாப்பாக இருப்பதாகவே நினைக்கிறார்கள். யதார்தத்தில் மக்கள் வைப்பு செய்த பணத்தில் 10% மட்டுமே வங்கியில் இருக்கும் (இது சராசரி மீளளிப்புகளை எதிர்கொள்ள போதுமானது). மிகுதி 90% ஆன வைப்புகள் வங்கியால் வட்டி தொழிலுக்கு பாவிக்கப்படும்.

மக்கள்; வங்கியில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இல்லை என்று நினைக்க தொடங்கினால் Withdrawals அதிகரிக்கும். எல்லா withdrawals ஐயும் சமாளிக்க 10% போதுமா என்ன? இந்த நிலையில் வங்கியால் இப்போதைக்கு withdraw பண்ண முடியாது என்று கூற, அதனால் மக்கள் பயந்து இன்னும் வங்கியில் சென்று வைப்புகளை மீளப்பெற முண்டியடிக்க, வங்கி திவால் ஆகும்!

இது அந்த வங்கியோடு நின்று விடாது மற்ற வங்கி மீதும் மக்கள் சந்தேகிக்க வங்கித்துறையே collapse ஆகும்.

இதை தவிர்ப்பதற்காகவே மத்திய வங்கி, Seylan Bank ஐ இலங்கை வங்கியிடம் கையளித்தது.

Golden Key இல் முதலிடப்பட்ட பணம் வெளிநாடுகளில் (முக்கியமாக அவுஸ்த்திரேலியாவில்) புதிய company களை ஆரம்பிப்பதற்காக நாட்டுக்கு வெளியே நகர்த்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

சரி Golden Key இல் கொதலாவல என்ன என்ன பண கொடுக்கல் வாங்கல் களை ஒவ்வொரு மாதமும் செய்தார்?

அவரது சம்பளம் 3,500,000/-
சரண நிதியம் 2,000,000/-
Solo U நிதியம் 400,000/-

இதே வேளை அவர் மனைவியோ 17 வருடங்களுக்குரிய gratuity ஐ பெற உரித்துடையவராக இருக்கையில் 20 வருடத்திற்கான gratuity ஐ பெற்றுள்ளார். அதுமட்டுமல்லது பல வெளி நாட்டு பயணங்களுக்கான பணமும் அவரது இதர செலவுகட்கான பணமும் எந்த வித கட்டுப்பாடோ ஒழுங்கோ இல்லாமல் இந்நிறுவனத்தில் இருந்து எடுக்க பட்டுள்ளது.

அவர் இப்பொது சிங்கப்பூரில் (உண்மையா என்று தெரியாத நோய்க்கு) சிகிச்சை பெறுவதாக நீதி மன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதை நீதிமன்றம் நிராகரித்து அவர் மீது பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

Golden Key ஐ பற்றி விசாரித்தபோது அதன் வைப்பாளர் ஒருவர் தொடர்பான அதிர்ச்சித்தகவல் கிடைத்தது. அவரது மகா புத்திசாலித்தனமான எந்த ஊடகத்திலும் வராத அந்த தகவல் உடன் இன்னும் பல சுவையான விஷயங்கள் பகுதி இரண்டில் வரும்..

  © பூச்சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS Poosaram www.poosaram.tk 2010

Back to TOP